English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
09 Dec, 2022 | 8:21 pm
Colombo (News 1st) கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானில் 7 பண்ணையாளர்களின் 60 கால்நடைகள் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்நகர், நாகேந்திரபுரம், புண்ணை நீராவி , பூநகரி, கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் 20 பண்ணையாளர்களுக்கு சொந்தமான 45 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
கிளிநொச்சி புளியம்பொக்கனை கண்டாவளை , கல்மடு , மயில்வாகனபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
திருகோணமலை தோப்பூரிலும் 15 பண்ணையாளர்களின் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இதேவேளை, கால்நடைகளின் உயிரிழப்பு தொடர்பில் ஆராய்வதற்காக வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தின் குழுவொன்று சம்பவ இடங்களுக்கு செல்லவுள்ளனர்.
கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் – டொக்டர் ஹேமாலி கொத்தலாவெல இதனை நியூஸ்ஃபெஸ்டிற்கு உறுதிப்படுத்தினார்.
04 Feb, 2023 | 04:37 PM
04 Feb, 2023 | 03:39 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS