Colombo (News 1st) இன வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் உதவிகளை வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வெளியுறவு கொள்கை தொடர்பாக மாநிலங்கள் அவையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அயல் நாடாகிய இந்தியா உதவிகளை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் இருப்பது குறித்தும் வெளிவிவகார அமைச்சர் இதன்போது விளக்கமளித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்தும் உரிய இடம் வழங்கப்படவில்லை என நம்பியதன் காரணமாகவே வாக்களிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.