பீடி இலைகளை கடத்த முற்பட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

இந்தியாவிலிருந்து பீடி இலைகளை கடத்த முற்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல்

by Staff Writer 08-12-2022 | 9:53 AM

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கற்பிட்டியில் கடந்த 05ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கற்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, ​இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 02 இந்தியப் படகுகள் சுற்றிவளைக்கப்பட்டன.

சுற்றிவளைக்கப்பட்ட 02 படகுகளிலும் இருந்த 8 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் புத்தளம் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் நேற்று(07) ஆஜர்படுத்துப்பட்டனர்.

இதன்போது எதிர்வரும் 12ஆம் திகதி வரை 08 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ்.எம்.சி. சதுரசிங்ஹ உத்தரவு பிறப்பித்ததாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.