Colombo (News 1st) ஜெர்மனியின் தென்பிராந்தியத்திலுள்ள பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த இரு மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இதன்போது 14 வயதான மாணவியொருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 வயதான மாணவியொருவர் காயமடைந்துள்ளார்.
Illerkirchberg நகரிலுள்ள அகதிகள் முகாமொன்றிலிருந்து வௌியே வந்த சந்தேகநபர் குறித்த சிறுமிகளை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரித்திரியாவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்று புகலிடக் கோரிக்கை விடுத்துள்ள 27 வயதான ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக ஜெர்மனிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இரு சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.