பாடசாலை சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு

by Staff Writer 05-12-2022 | 2:38 PM

Colombo (News 1st) கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சிற்றுண்டிச்சாலையிலிருந்து 07 பக்கெட் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 38 போதைவில்லைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் சிற்றுண்டிச்சாலையை நடத்திச்சென்ற 42 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.