.webp)
Colombo (News 1st) இறுதியானது என அறியப்படும் டஸ்மேனியன் புலியின்(Tasmanian Tiger) உடற்பாகங்கள் 85 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றின் அலுமாரி ஒன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.
1936ஆம் ஆண்டு ஹோபார்ட்(Hobart) மிருகக்காட்சிச்சாலையில் உயிரிழந்த இந்த புலியின் உடல், உள்ளூர் அருங்காட்சியம் ஒன்றுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், புலியின் எலும்புக்கூடு மற்றும் தோல் ஆகியவற்றுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை மர்மமாகவே இருந்துவந்துள்ள நிலையில், அதன் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.