கிளிநொச்சி பஸ் விபத்தில் 22 பேர் காயம்

by Staff Writer 05-12-2022 | 2:29 PM

Colombo (News 1st) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி - 248ஆம் கட்டை பகுதியில் விபத்திற்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 பயணிகளுடன் பயணித்த பஸ் விபத்தில் காயமடைந்தவர்களில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்றும் அடங்குவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினர்.

இன்று(05) அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.