Colombo (News 1st) அடுத்த வருடம் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த செயலி அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் விரும்பும் பட்சத்தில் இந்த செயலியின் மூலம் அவர்களின் இருப்பிடத்தைச் சரிபார்க்க முடியும் எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பின் அதற்கும் குறித்த செயலியூடாக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.