Colombo (News 1st) அடையாளம் காணப்படாத Glaucoma நோயாளர்கள் சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக கண் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் முதலில் தென்படுவதில்லை என கண் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தில்ருவனி ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Glaucoma நோயினால் கண் பார்வை அற்றுப் போகுமாயின், கண் பார்வையை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது போகும் என சுட்டிக்காட்டிய வைத்திய நிபுணர் தில்ருவனி ஆரியசிங்க, இதனால் ஆரம்பகட்டத்திலேயே இதனை கண்டறிவது அவசியமாகும் என குறிப்பிட்டார்.