போஷாக்கு குறைபாட்டுடன் 30,000 சிறுவர்கள் அடையாளம்

நாட்டில் போஷாக்கு குறைபாட்டுடன் 30,000 சிறுவர்கள் அடையாளம்

by Staff Writer 03-12-2022 | 3:35 PM

Colombo (News 1st) நாடு முழுவதும் போஷாக்கு குறைபாட்டுடன் சுமார் 30,000 சிறுவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

குறித்த சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த குறிப்பிட்டார்.

அத்துடன், போஷாக்கு உணவு அடங்கிய பொதிகளையும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.