இவ்வருடத்தில் யானை - மனித மோதல்களால் 127 பேர் பலி

இவ்வருடத்தில் இதுவரை யானை - மனித மோதல்களால் 127 பேர் உயிரிழப்பு

by Staff Writer 03-12-2022 | 7:39 PM

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யானை - மனித மோதல்களில் 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 395 யானைகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று (03) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். 

அநுராதபுரம் மாவட்டத்தில் யானை - மனித மோதல் அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டில் யானைகள் நடமாடும் 16 இடங்களில் மனிதர்களின் செயற்பாடுகளால் தடையேற்பட்டுள்ளமை இதன்போது வௌிக்கொணரப்பட்டது. 

அநுராதபுரம் மாவட்டத்தில் யானைகள் அதிகளவில் நடமாடும் 05 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அங்கு யானைகளின் நடமாட்டத்திற்கு மனித செயற்பாடுகளால் இடையூறு ஏற்பட்டுள்ளமையால், யானை - மனித மோதல்கள் அதிகரித்துள்ளதாக குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.