அளுத்கமையில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் ஆயுதமேந்திய குழு கொள்ளை

by Bella Dalima 03-12-2022 | 6:58 PM

Colombo (News 1st) அளுத்கம - பொந்துபிட்டியவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் ஆயுதமேந்திய குழுவொன்று கொள்ளையடித்துள்ளது.

வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதம் ஏந்திய 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் வீட்டுக்குள் புகுந்து 2 கையடக்க தொலைபேசிகள் மற்றும் தங்க மோதிரத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் வெலிப்பென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.