Colombo (News 1st) இந்தியா உள்ளிட்ட மலேரியா அதிகம் பரவும் நாடுகளுக்கு சென்று, நாடு திரும்புவோர் மலேரியா தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 07 மலோரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மலேரியா தொற்று தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.