பேலியகொடை கறுத்த பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு

பேலியகொடை கறுத்த பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு

by Bella Dalima 01-12-2022 | 4:04 PM

Colombo (News 1st) பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.