Colombo (News 1st) இன்று(01) ஆரம்பமாகும் பண்டிகைக் காலத்திலும் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளாந்தம் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர் மின்சார உற்பத்தி மற்றும் நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக தொடர்ந்தும் மின்சார உற்பத்தியில் சிக்கல் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்தார்.
இதனிடையே, இன்றும்(01) நாளையும்(02) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில், A-W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் மற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.