Colombo (News 1st) 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியாமல்போனது.
இரண்டாம் பாதியின் ஒன்பதாவது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் ப்ரூனோ FERNENDEZ முதலாவது கோலை போட்டார்.
இதன்போது உருகுவே அணியால் கோலடிக்க முடியாமல்போனது.
உபாதை காரணமாக வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் போர்த்துக்கல் சார்பில் ப்ரூனோ FERNENDEZ தமது இரண்டாவது கோலை போட்டார்.
இதனையடுத்து போட்டி 2 - 0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.