Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(29) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கனின்(Antony Blinken) அழைப்பிற்கு அமைய வௌிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளது.
அமைச்சரின் இந்த விஜயத்தில் 03 அரச அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமெரிக்காவில் தங்கவுள்ள வௌிவிவகார அமைச்சர், அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் பலரை சந்திக்கவுள்ளார்.