24 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 24 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

by Staff Writer 29-11-2022 | 7:18 PM

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 24 பேர் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மீனவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.

24 இந்திய மீனவர்களும் நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.