கைது செய்யப்பட்டுள்ள ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 29-11-2022 | 12:35 PM

Colombo (News 1st) ஓமானில் இலங்கை பெண்களை பல்வேறு செயற்பாடுகளில் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானிடம் 06 மணித்தியால வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து இன்று(29) அதிகாலை 3.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டார்.

ஈ.குஷான் மீது ஓமானுக்கு பணிப்பெண்களாக செல்வோரிடம் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை, பாலியல் ரீதியாக அச்சுறுத்தியமை, ஆட்கடத்தல், இலங்கை பணிப்பெண்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள ஈ.குஷானை இன்று(29) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.