இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 29-11-2022 | 10:47 AM

Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண ஊழியர்கள் இன்று(29) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் போக்குவரத்தினை மேற்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதனிடையே வவுனியா நகரிலும் போக்குவரத்தினை மேற்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் பல மணி நேரம் மக்கள் பஸ் நிலையங்களில் காத்திருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்