English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
29 Nov, 2022 | 5:43 pm
Colombo (News 1st) சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அதிகாரமுள்ள இணைப்பாட்சி அடிப்படையிலான முதற்கட்ட இணக்கப்பாட்டை அரசு வௌிப்படுத்தாத வரை தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணி ( TULF) தெரிவித்துள்ளது.
சில தமிழ் கட்சிகள் அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயாராகி வருவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''பிள்ளை பெற முடியாது என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அரசுடன் தேன் நிலவுக்கு சென்று, வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும் மக்களையும் அவமதிக்கும் செயல் தேவைதானா என தமிழர் விடுதலைக் கூட்டணி கேள்வி எழுப்பியுள்ளது.
சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரும் வலிகளை புரிந்துகொள்ளாத ஒரு பிரிவினரும் வலி சுமந்த தமிழர்கள் சார்பில் தீர்மானங்களை எடுத்து, அதனை அவர்கள் மேல் சுமத்தும் முயற்சிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அதிகாரமுள்ள இணைப்பாட்சி அடிப்படையிலான அரசொன்றை தமிழர்களின் மரபுவழி தாயகத்தில் அமைப்பதற்கான முதற்கட்ட இணக்கப்பாட்டை அரசு வெளிப்படுத்தாத வரை, தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு என தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
07 Feb, 2023 | 10:39 AM
07 Feb, 2023 | 07:15 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS