.webp)
Colombo (News 1st) லிந்துலை பாடசாலையொன்றின் மாணவர்கள் உள்ளிட்ட 22 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாடசாலையிலிருந்து இன்று(28) பகல் வீடு திரும்பும் போதே இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரின் தாயும் அடங்குவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 22 பேரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.