மட்டக்குளியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 28-11-2022 | 3:48 PM

Colombo (News 1st) மட்டக்குளி, மத்திய வீதி பகுதியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

38 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர் காரொன்றிலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் பின்னால் மற்றுமொரு காரில் வந்த இரு நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர். 

கடுமையான காயங்களுக்குள்ளான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.