திருமண பந்தத்தில் இணைந்த கௌதம் - மஞ்சிமா

திருமண பந்தத்தில் இணைந்த கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

by Chandrasekaram Chandravadani 28-11-2022 | 5:03 PM
Colombo (News 1st) நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகியோர் இன்று(28) திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். நடிகர் கார்த்திக்கின் மகனான நடிகர் கௌதம் கார்த்திக் 'கடல்' திரைப்படத்தின் மூலமும் நடிகை மஞ்சிமா மோகன் 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படத்தின் மூலமும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். 'தேவராட்டம்' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதன்பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலந்திருந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். புதுமண தம்பதியினருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.