மட்டக்குளியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

மட்டக்குளியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2022 | 3:48 pm

Colombo (News 1st) மட்டக்குளி, மத்திய வீதி பகுதியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

38 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர் காரொன்றிலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் பின்னால் மற்றுமொரு காரில் வந்த இரு நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர். 

கடுமையான காயங்களுக்குள்ளான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்