Colombo (News 1st) பழைய முறையிலேயே எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு கூறியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.