ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரிப்பு

by Bella Dalima 26-11-2022 | 5:36 PM

Colombo (News 1st) பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்கிய நாணயக்கார தெரிவித்தார். 

பிள்ளைகள் தொடர்புகொள்ளும் நபர்கள், செல்லும் இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். 

புகையிலை பாவனைகளும் தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும் போது, விழித்திருக்க முடியுமென்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக  தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த போதைப்பொருள் பாவனையால் உறக்கம் சார்ந்த பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.