RAW நிர்வாகி இரகசியமாக ஜனாதிபதியை சந்தித்தாரா?

RAW-வின் தலைமை நிர்வாகி இரகசியமாக கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்ததாக தகவல்

by Staff Writer 23-11-2022 | 6:40 PM

Colombo (News 1st) ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி Samant Kumar Goel கொழும்பிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக நம்பகரமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக காலைக்கதிர் - ePaper செய்தி வௌியிட்டுள்ளது.

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி, மூடிய அறையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.