மேலும் 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

by Staff Writer 23-11-2022 | 7:24 PM

Colombo (News 1st) இலங்கையை சேர்ந்த மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தின் தனுஷ்கோடியை இன்று (23) காலை இவர்கள் சென்றடைந்துள்ளனர்.

5 ஆண்களும் 2 பெண்களும் 3 சிறார்களுமே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இவர்களை மண்டபம் முகாமிற்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.