நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஸ

நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஸ

by Staff Writer 20-11-2022 | 2:32 PM

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ நாடு திரும்பியுள்ளார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்திறகு சொந்தமான E.K - 650 விமானத்தில் அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பசில் ராஜபக்ஸவை வரவேற்பதற்காக கட்சியின் உறுப்பினர்கள் பலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.