Colombo (News 1st) மெதகம பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரால் நடத்திச்செல்லப்பட்ட சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 8 பேரை கைது செய்துள்ளனர்.
தனக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் குறித்த சூதாட்ட நிலையத்தை அந்த உறுப்பினர் நடத்திச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மெதகம, மொனராகலை மற்றும் புத்தலயை சேர்ந்த 26 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பிபிலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.