பெண் பொலிஸ் அதிகாரிகளை மரியாதை குறைவாக நடத்தியமைக்கு பொலிஸ் தலைமையத்திற்கு முன்பாக எதிர்ப்பு

by Bella Dalima 17-11-2022 | 8:00 PM

Colombo (News 1st) போராட்டத்தின் போது பெண் பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கழுத்தைப் பிடித்து தள்ளிய சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸ் அதிகாரிக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சிவில்  அமைப்புகள் சில பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இன்று மாலை எதிர்ப்பில் ஈடுபட்டனர். 

ஒன்றரை மணித்தியாலங்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் பொலிஸ்  தலைமையகத்தில் மகஜர் கையளித்ததன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே, பெண்களை மரியாதை இன்றி நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து போராட்டக்கள தாய்மார்கள் அமைப்பினர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸ்  தலைமையகத்திற்கு முன்பாக இன்று முற்பகல்  அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
 

ஏனைய செய்திகள்