.webp)
Colombo (News 1st) சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் R.H.S.சமரதுங்க, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம், வணிக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் S.D.கொடிகார, துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.