துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

சியம்பலாப்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

by Bella Dalima 15-11-2022 | 4:29 PM

Colombo (News 1st) கம்பஹா - சியம்பலாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 42 வயதான ஆராச்சிவத்த பகுதியை சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார்.

தனது பிள்ளையை அழைத்து செல்வதற்காக பாடசாலைக்கு சென்றிருந்த போதே, அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு பஸ்பொட்டா என்ற நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உளவு பார்த்த குற்றச்சாட்டில், குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.