ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கைது

by Staff Writer 14-11-2022 | 5:35 PM

Colombo (News 1st) ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர் இன்று(14) முற்பகல், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். 

இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண்கள் சிலரை விடுவிக்க கோரி, ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர் கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தின் ​பொது கருவாத்தோட்டம் பொலிஸாரால் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.