தனுஷ்கவுக்கு பிணை கோரி மற்றுமொரு மனு

தனுஷ்கவுக்கு பிணை கோரி நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

by Staff Writer 14-11-2022 | 1:19 PM

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை கோரி நியூசவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிணை மனு மீதான பரிசீலனை எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி இடம்பெறும் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ளன.

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்காக அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த தனுஷ்க குணதிலக்க, உபாதை காரணமாக ஓய்விலிருந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.

சிட்னி நீதிமன்றத்தில் பிணை கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும் அது நிராகரிக்கப்பட்டமையால் தனுஷ்க குணதிலக்க தரப்பு சட்டத்தரணிகளால் நியூசவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.