படகு விபத்து: 2 சிறுமிகளின் சடலங்களும் மீட்பு

சூரியவெவ படகு விபத்தில் காணாமல் போயிருந்த 2 சிறுமிகளின் சடலங்களும் மீட்பு

by Staff Writer 13-11-2022 | 4:23 PM

Colombo (News 1st) சூரியவெவ - மகாவெலிகடார குளத்தில் படகு கவிழ்ந்ததில் மூழ்கி காணாமற்போயிருந்த 02 சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமிகளின் சடலங்கள் இன்று(13) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் - ரிதிகம, பிஹிம்பிய பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 02 சிறுமிகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 10 வயதி சிறுமியின் சடலம் நேற்று(12) பிற்பகல் மீட்கப்பட்டது. 

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மீன்பிடி படகில் 08 மாத குழந்தை உட்பட 08 பேர் பயணித்துள்ளனர்.

சூரியவெவ பகுதியிலுள்ள உறவினர் வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வந்த சந்தர்பத்திலேயே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.