நாட்டை வந்தடைந்த மற்றொரு நிலக்கரி கப்பல்

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

by Rajalingam Thrisanno 11-11-2022 | 2:55 PM

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலில் 60 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அன்ரூ நவமுனி  தெரிவித்தார். 

தென்னாபிரிக்காவிலிருந்து குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

கப்பலில் இருந்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக அன்ரூ நவமுனி தெரிவித்தார்.

இதுவரை 03 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.