கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு திரும்பியது

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு திரும்பியது - குடிவரவு - குடியகல்வு திணைக்களம்

by Staff Writer 09-11-2022 | 8:36 AM

Colombo (News 1st) கடவுச்சீட்டு விநியோகம் இன்று(09) வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு நேற்றிரவு(08) சீரமைக்கப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்றைய தினம்(08) கடவுச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.