ஜனாதிபதி ரணில் - IMF தலைவர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி ரணில் - IMF தலைவர் இடையே சந்திப்பு

by Staff Writer 09-11-2022 | 9:26 AM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் Kristalina Georgieva இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

எகிப்தில் இடம்பெறும் COP 27 மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது கடன் முகாமைத்துவம் தொடர்பில் வெற்றிகரமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக ருவன் விஜேவர்தன தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சந்திப்பில் கானா நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவின் சபாநாயகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.