.webp)
Colombo (News 1st) வாடகை முச்சக்கரவண்டிகளுக்காக வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றரவு()6) முதல் வாடகை முச்சக்கரவண்டிகளுக்காக வாராந்தம் வழங்கப்படும் எரிபொருளின் அளவு 10 லீட்டராக அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாடகை முச்சக்கரவண்டிகளுக்காக இதுவரை 05 லீட்டர் எரிபொருள் வாராந்தம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.