ஜனாதிபதி - தேசிய வர்த்தக குழு இடையே கலந்துரையாடல்

உள்நாட்டு தொழில் துறைகளை வலுப்படுத்தும் வகையில் ஆதரவு வழங்குவதற்கு ஏதுவான நிகழ்ச்சித் திட்டம் - ஜனாதிபதி

by Staff Writer 06-11-2022 | 5:24 PM

Colombo (News 1st) சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உள்நாட்டு தொழில் துறைகளை வலுப்படுத்தும் வகையில் ஆதரவு வழங்குவதற்கு ஏதுவான வர்த்தக நிகழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய வர்த்தக குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.