.webp)
Colombo (News 1st) வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி ரயில் பூனேவயில் தடம்புரண்டுள்ளது.
இதனால் வடக்கு மார்த்திலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார்.
தற்போது ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.