மாத்தறை துப்பாக்கிச்சூடு தொடர்பில் HRC விசாரணை

மாத்தறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

by Bella Dalima 29-10-2022 | 3:42 PM

Colombo (News 1st) மாத்தறை - திஹகொடயில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசார​ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மாத்தறை மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

திஹகொடயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சிறுவனுக்கு நேற்றிரவு சத்திரகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

திஹகொட பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் காயமடைந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதி பொலிஸ் இன்ஸ்பெக்டர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டு இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.