மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நாளை (29) மாபெரும் இசை நிகழ்ச்சி

மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நாளை (29) மாபெரும் இசை நிகழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2022 | 7:37 pm

Colombo (News 1st) தமிழ் பேசும் மக்களின் சக்தியாக திகழும் சக்தி தொலைக்காட்சியின் 24 ஆவது அகவைப் பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று நாளை (29) நடைபெறவுள்ளது. 

மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு  மாபெரும் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய பின்னணிப் பாடர்கர்களான சத்தியபிரகாஷ்,  ஹரிப்பிரியாவுடன் நம்நாட்டுக் கலைஞர்கள் பலரும் மீன்பாடும் தேன் நாடாம் மட்டு மாநகரில் நாளை இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.

 இந்த இசை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்