Colombo (News 1st) நுவரெலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 160 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
நுவரெலியாவை சேர்ந்த 25 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.