IMF உடன் நவம்பர் 3 இல் மீண்டும் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் நவம்பர் 3 இல் மீண்டும் கலந்துரையாடல்

by Bella Dalima 28-10-2022 | 5:57 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையின் கடன் பெறுநர்களுக்கும் இடையிலான மற்றுமொரு தீர்மானமிக்க கலந்துரையாடல் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து செல்லும் சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதிக்கும் மேலும் சில அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பிற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மற்றும் கடன் பெறுநர்களுக்கான மாநாடு தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.