ஊழல்ஒழிப்பு சட்டமூலம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும்

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நவம்பர் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - விஜேதாச ராஜபக்ஸ

by Staff Writer 24-10-2022 | 2:54 PM

Colombo (News 1st) ஊழல் ஒழிப்பு சட்டமூலம் எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடுவதற்கும் தயாராகி வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.