நாவலப்பிட்டியில் ஒருவர் தாக்கி கொலை

நாவலப்பிட்டியில் ஒருவர் தாக்கி கொலை

by Staff Writer 09-10-2022 | 2:56 PM

Colombo (News 1st) நாவலப்பிட்டி - இங்குருஓய வடக்கு பகுதியில் நபர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். 

பலத்த காயங்களுடன் வீதியில் வீழ்ந்திருந்த தம்பதியினர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

நாவலப்பிட்டி பகுதியைச் ​சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தம்பதியினருடன் காணப்பட்ட முறுகல் நிலையே இந்த கொலைச் சம்பவத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.