இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

by Staff Writer 08-10-2022 | 5:03 PM

Colombo (News 1st) ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.